மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 122 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயர்வடைந்து 62,969 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 18,633 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றித் தொடங்கி பின்னர் உயர்வடைந்தது. காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 177.96 புள்ளிகள் உயர்வடைந்து 63,024.34ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.50 புள்ளிகள் உயர்ந்து 18,634.15 ஆக இருந்தது.
அமெரிக்காவின் கடன்உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பாக முடிவின் மீதான அந்நாட்டின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இந்த நிலையில் சந்தைகளின் நிலை உயரலாம் என முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தட்டையாகத் தொடங்கி ஏற்ற இறக்கத்துடன் பயணித்த இந்திய பங்குச்சந்தைகள், தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 122.75 புள்ளிகள் உயர்வடைந்து 62,969.13ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி35.10 புள்ளிகள் உயர்ந்து 18,633.80 ஆக இருந்தது.
» இந்தியாவில் முதல் முறை | ஜப்பானின் ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தமிழகத்தில் ரூ.128 கோடி முதலீடு
» 2023-24-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர வாய்ப்பு: ரிசர்வ் வங்கி
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, இன்போசிஸ், மாருதி சுசூகி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.