பங்குச்சந்தை | சென்செக்ஸ் 83 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 108 புள்ளிகள் உயர்வடைந்து 61,539 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27 புள்ளிகள் உயர்ந்து 18,157 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. இருந்த போதிலும் வர்த்த நேரத்தின் போது சரிவை சந்தித்தது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 83.15 புள்ளிகள் சரிவடைந்து 61,348.59 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.90 புள்ளிகள் சரிந்து 18,085.05 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகள் சாதகமான போக்குகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் லாபத்தில் தொடங்கிய போதிலும், நிதி மற்றும் எஃப்எம்ஜிசி பங்குகளின் சரிவு காரணமாக வர்த்தக நேரத்தின் போது வீழ்ச்சியை சந்திதத்து.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, டிசிஎஸ், கோடாக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE