சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிவு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 128 புள்ளிகள் (0.21 சதவீதம்) சரிவடைந்து 61,431 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 51 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிந்து 18,129 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 216.91 புள்ளிகள் உயர்வடைந்து 61,777.55 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 64.35 புள்ளிகள் உயர்ந்து 18,246.10 ஆக இருந்தது.

வாராந்திர எஃப் அண்ட் ஓ காலாவதி, உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் போன்ற காரணங்கள் இருந்த போதிலும், எஸ்பிஐ, ஐடிசி வருவாய் அறிக்கை, முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ்128.90 புள்ளிகள் சரிவடைந்து 61,431.74 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 51.80 புள்ளிகள் சரிந்து 18,129.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டெக் மகேந்திரா, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE