பங்குச்சந்தை | சென்செக்ஸ் 159 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 93 புள்ளிகள் சரிவடைந்து 61,838 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 18,265 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:34 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 159.89 புள்ளிகள் சரிவடைந்து 61,772.58 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
36.10 புள்ளிகள் உயர்ந்து 18,250.40 ஆக இருந்தது.

கடன் உச்சவரம்பு நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், ஐடிசி,டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE