சென்னை: உலக அளவில் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஜுவல்லரி பிராண்டான ஜோயாலுக்காஸ் நிறுவனம் இந்த ஆண்டின் மாபெரும் நகைகள் திருவிழா ஆஃபரை மே 12 முதல் அனைத்து ஜோயாலுக்காஸ் ஷோரூம்களிலும் வழங்கி வருகிறது.
இதன்படி எல்லா நகைகளுக்கும் செய்கூலி/சேதாரம் செலவில் நம்ப முடியாத அளவுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆஃபர் ஜூன் 11-ம் தேதி வரை உண்டு. இதில் தங்கம், வைரம், விலைமதிப்பற்ற ஆபரணக் கற்கள், வெள்ளி நகைகள் ஆகியவை அடங்கும்.
இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆயுட்கால பராமரிப்பு, ஓர் ஆண்டு இலவச இன்சூரன்ஸ், திரும்ப வாங்கிக்கொள்ளும் உத்தரவாதம் ஆகியவை கிடைக்கின்றன. இங்கு 10 லட்சத்துக்கும் அதிகமான டிசைன்களில் நகைகள் உள்ளன.
இதுகுறித்து ஜோயாலுக்காஸ் குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது, ``அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் நயமான, பலதரப்பட்ட நகை வகைகளை வழங்குவதே எங்கள் நோக்கம். உலகில் ஒரே ஒரு ஜோயாலுக்காஸ் நிறுவனம்தான் உள்ளது. எமது நெட்வொர்க்கில் இருப்பதாகக் கூறி இது போன்ற பெயரைப் பயன்படுத்தும் வேறு எந்த நிறுவனமும் ஜோயாலுக்காஸின் அங்கம் அல்ல'' என்றார்.
» சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி
» அடுத்த 3 ஆண்டுகளில் 11,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வோடபோன் திட்டம்