சென்செக்ஸ் 413 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 413 புள்ளிகள் (0.66 சதவீதம்) சரிவடைந்து 61,932 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி112 புள்ளிகள் (0.61 சதவீதம்) சரிந்து 18,286 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் தட்டையாக தொடங்கிய இன்றைய வர்த்தகம், சிறிது நேரத்தில் சரிவடையத் தொடங்கியது. காலை 09.58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 37.70 புள்ளிகள் சரிவடைந்து 62,308.01 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.35 புள்ளிகள் உயர்ந்து 18,403.20 ஆக இருந்தது. தட்டையாக தொடங்கிய பங்கு வர்த்தகம் நாள்முழுவதும் நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. கடைசியில் நிதி மற்றும் வங்கி பங்குகளின் விற்பனை அழுத்தம் காரணமாக வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 413.24 புள்ளிகள் சரிவடைந்து 61,932.47 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி112.35 புள்ளிகள் சரிந்து 18,286.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE