மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 31 புள்ளிகள் சரிவடைந்து 62,314 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1 புள்ளிகள் சரிந்து 18,397 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் தட்டையாக தொடங்கிய இன்றைய வர்த்தகம் வர்த்தக நேரத்தின்போது சரிவடையத் தொடங்கியது. காலை 09.58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 37.70 புள்ளிகள் சரிவடைந்து 62,308.01 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.35 புள்ளிகள் உயர்ந்து 18,403.20 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலவையான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே இன்றைய வர்த்தகத்தை தொடங்கின. நிதி மற்றும் கட்டுமான பங்குகளின் சரிவு சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.
ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, ஐடிசி, என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், ஐடிசி, கோடாக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 mins ago
வணிகம்
6 mins ago
வணிகம்
3 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago