சென்செக்ஸ் 317 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 317 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயர்வடைந்து 62,345 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்ந்து 18,398 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 254.67 புள்ளிகள் உயர்வடைந்து 62,282.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 48.55 புள்ளிகள் உயர்ந்து 18,363.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் மந்தமான போக்குகள் நிலவிய போதிலும், சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனைகளின் பணவீக்க வீழ்ச்சி, வாகனம் மற்றும் வங்கிப்பங்குகளின் லாபம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 317.81 புள்ளிகள் உயர்வடைந்து 62,345.71 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84.05 புள்ளிகள் உயர்ந்து 18,398.85 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, இன்போசிஸ், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மாருதி சுசூகி, டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெட்ஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE