சென்செக்ஸ் 123 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் (0.20 சதவீதம்) உயர்வடைந்து 62,027 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் (0.10 சதவீதம்) உயர்ந்து 18,314 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வார இறுதி நாள் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 205.49 புள்ளிகள் சரிவடைந்து 61,699.49 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93.00 புள்ளிகள் சரிந்து 18,204.00 ஆக இருந்தது.

நாளின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கினாலும், வர்த்தத்தின் பின்பகுதியில் வாகனம் மற்றும் நிதிப்பங்குகளின் ஏற்றத்தால் லாபத்தை எட்டியது. முதலீட்டாளர்கள் ஏப்ரல் மாதத்திற்கான சில்லரை பணவீக்கத்திற்காக காத்திருக்கும் நிலையில் பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாளை ஏற்றத்தில் நிறைவு செய்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 123.38 புள்ளிகள் உயர்வடைந்து 62,027.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17.80 புள்ளிகள் உயர்ந்து 18,314.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, கோடாக் பேங்க், ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE