சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 178 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயர்வடைந்து 61,940 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி49 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயர்ந்து 18,315 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 105.26 புள்ளிகள் சரிவடைந்து 61,656.07 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.05 புள்ளிகள் சரிந்து 18,262.90 ஆக இருந்தது.

லாபத்துடன் திறந்த போதிலும் வர்த்தக நேரத்தின் போது சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் ஊசலாடியது. வர்த்தக நேரத்தின் இறுதியில் காலாண்டு அறிக்கைகளின் உற்சாகம், நிதிபங்குகள் மீட்சியால் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன. இருந்த போதிலும் அமெரிக்க பணவீக்கத் தரவுகளுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 178.87 புள்ளிகள் உயர்வடைந்து 61,761.36 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 49.15 புள்ளிகள் உயர்ந்து 18,315.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, கோடாக் மகேந்திரா, விப்ரோ, எம் அண்ட் எம் பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE