பங்குச்சந்தை | சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 105.26 புள்ளிகள் சரிவடைந்து 61,656.07 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்வடைந்து 61,896 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 18,306 ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 105.26 புள்ளிகள் சரிவடைந்து 61,656.07 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.05 புள்ளிகள் சரிந்து 18,262.90 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய குழப்பமான சூழல் இருந்த போதிலும் இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கி நகர்ந்தன. முதலீட்டாளர்கள் புதன்கிழமை பிற்பகுதியில் வெளியாகவுள்ள அமெரிக்க பணவீக்கத் தரவுகளுக்காகவும், காலாண்டு அறிக்கைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் பேங்க், இன்போசிஸ், டாடா ஸ்டீல்ஸ், டெக் மகேந்திரா, என்டிபிசி, கோடாக் மகேந்திரா, டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE