ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 2 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 2 புள்ளிகள் (0.00 சதவீதம்) சரிவடைந்து 61,761 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்ந்து 18,265 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 79.79 புள்ளிகள் உயர்வடைந்து 61,844.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி34.80 புள்ளிகள் உயர்ந்து 18,299.20 ஆக இருந்தது.

அமெரிக்க பங்குகள் எதிர்கால விலையில் (ஃபியூச்சர்) விற்பனையானதால், முதலீட்டாளர்கள் லாபங்களை பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஏப்ரல் மாதத்தின் பணவீக்க தரவுகள் குறித்த எச்சரிக்கை காரணமாகவும் காலையில் லாபத்தில் தொடங்கிய பங்குச்சந்தைகள் இன்றயை நாளை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவு செய்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 2.92 புள்ளிகள் சரிவடைந்து 61,761.33 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1.55 புள்ளிகள் உயர்ந்து 18,265.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, மாருதி சுசூகி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE