சென்செக்ஸ் 555 புள்ளிகள் உயர்வு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 555 புள்ளிகள் (0.91 சதவீதம்) உயர்வடைந்து 61,749 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 165 புள்ளிகள் (0.92 சதவீதம்) உயர்ந்து 18,255 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் சற்று தடுமாற்றத்துடன் இருந்தபோதிலும் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 51.63 புள்ளிகள் உயர்வடைந்து 61,244.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.30 புள்ளிகள் உயர்ந்து 18,118.15 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி புதன்கிழமை தனது வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது, அதன் விளைவாக உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் தடுமாற்றத்துடனேயே தொடங்கின. இருந்தபோதிலும் வர்த்தக நிறுவனங்களின் வருவாய் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எஃப்ஐஐ கொள்முதல் காரணமாக நிலைபெற்ற சந்தைகள் இறுதியில் லாபத்தில் நிறைவடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 555.95 புள்ளிகள் உயர்வடைந்து 61,749.25 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி165.95 புள்ளிகள் சரிந்து 18,255.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசூகி, என்டிபிசி, எல் அண்ட் டி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ, எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE