சென்செக்ஸ் 161 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 161 புள்ளிகள் (0.26 சதவீதம்) சரிவடைந்து 61,193 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் (0.32 சதவீதம்) சரிந்து 18,089 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 253.86 புள்ளிகள் சரிவடைந்து 61,100.85 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 82.45 புள்ளிகள் சரிந்து 18,065.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறையான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பு இன்று இரவு வெளியாக உள்ள நிலையில் அது குறித்த எச்சரிக்கை போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகள் 8 நாள் தொடர் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று வீழ்ச்சியில் நிறைவடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 161.41 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,193.30 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.80 புள்ளிகள் சரிந்து 18,089.85 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE