சென்செக்ஸ் 169 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 169 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்வடைந்து 60,300 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்ந்து 17,813 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவேத் தொடங்கின. வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தன. காலை 09:47 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 140.29 புள்ளிகள் சரிவடைந்து 59,990.42 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி35.60 புள்ளிகள் சரிவடைந்து 17,733.65 ஆக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கி வர்த்த நேரத்தில் தடுமாற்றத்துடனேயே பயணித்தது. இருந்த போதிலும் சாதகமாக வெளியான சில நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் காரணமாக உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழலிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாபத்தில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 169.87 புள்ளிகள் உயர்வடைந்து 60,300.58 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.35 புள்ளிகள் உயர்ந்து 17,813.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட பங்குகள் உயர்வடைந்திருந்தன. பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE