பங்குச்சந்தை | சென்செக்ஸ் 6 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் சற்று சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 60,043 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6 புள்ளிகள் சரிந்து 17,736 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை சற்றே சரிவுடன் தட்டையாகவேத் தொடங்கின. காலை 09:27 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 6.62 புள்ளிகள் சரிவடைந்து 60,049.48 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.70 புள்ளிகள் உயர்வடைந்து 17,728.70ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல், உலோகம், பார்மா, தகவல்தொழில்நுட்ப பங்குகளின் சரிவுகள் காரணமாக பங்குச்சந்தைகள் சற்றே சரிவுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. கோடாக் மகேந்திரா, சன்பார்மா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி. இன்போசிஸ், ஏசியன் பெயின்ட் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE