ஏற்றத்துடன் தொடங்கி சற்றே தடுமாறும் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வடைந்து 59,850 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 17,670 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும் தகவல்தொழில்நுட்பம், பார்மா பங்குகளின் விற்பனை அழுத்தத்தால் சரிவை நோக்கி பயணித்தன. காலை 10.26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26.30 புள்ளிகள் உயர்ந்து 59681.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,633.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சூழல், நிதி பங்குகளின் ஏற்றத்தால் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாபத்தில் தொடங்கின. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் காலாண்டு அறிக்கையின்படி அதன் அதிகரித்திருந்த லாபம் காரணமாக அந்நிறுவன பங்குகள், ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ நிறுவனப்பங்குகள் அதிகம் விற்பனையாகியது. இதனால் காலையில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் அதிகாமாக உயர்ந்திருந்தது. ஆனாலும், வர்த்தக நேரத்தின் போது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பார்மா பங்குகளின் விற்பனை அழுத்தம் காரணமாக தொடக்க லாபத்தை இழந்து பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெட்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டிசிஎஸ், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE