சென்செக்ஸ் 22 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 22 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயர்வடைந்து 59,655 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.40 புள்ளிகள் (0.00 சதவீதம்) சரிந்து 17,624 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கிச் சென்றது. பகல் 12:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 67.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,564.50 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.10 புள்ளிகள வீழ்ச்சியடைந்து 17,595.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழலுக்கு மத்தியில் பங்குச்சந்தைகள் சற்று லாபத்துடனேயே தொடங்கியது. ஆனாலும் ஏற்ற இறக்கமாகவே சென்ற வர்த்தகத்தால் தட்டையாகவே நிறைவு செய்தது. இந்த வாரத்தில் பலவீனமான காலாண்டு வருவாய்களால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சந்தித்த கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 22.71 புள்ளிகள் உயர்வடைந்து 59,655.06 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.50 புள்ளிகள் சரிந்து 17,624.00 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஐடிசி, டிசிஎஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE