பங்குச்சந்தை | சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 16 புள்ளிகள் உயர்வடைந்து 59,648 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4 புள்ளிகள் உயர்ந்து 17,628 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது சரிவை நோக்கிச் சென்றது. பகல் 12:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 67.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,564.50 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29.10 புள்ளிகள வீழ்ச்சியடைந்து 17,595.35 ஆக இருந்தது.

நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தட்டையாக தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் சரிவை அடைந்தது. ஹெச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் குறைந்திருப்பதால் எச்சரிக்கை அடைந்துள்ள முதலீட்டாளர்கள் இன்றைய நாளின் பிற்பகுதியில் வெளியாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் காலாண்டு அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE