சென்செக்ஸ் 64 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 64 புள்ளிகள் (0.11 சதவீதம்) உயர்வடைந்து 59,632 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 17,624 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை லாப நஷ்டமின்றித் தொடங்கிய போதிலும், விரைவில் ஏற்றம் பெற்றன. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 154.40 புள்ளிகள் உயர்வடைந்து 59,722.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி60.25 புள்ளிகள் உயர்வடைந்து 17,679.00 ஆக இருந்தது.

ஒரு தட்டையான தொடக்கத்தினைத் தொடர்ந்து இன்றைய நாள் முழுவதும் பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாகவே தொடர்ந்தது. நிதி, வங்கி,வாகனம் மூலதனப் பங்குகளால் இந்திய பங்குச்சந்தைகள் தங்களது மூன்று நாள் நஷ்டத்திற்கு முடிவு கட்டியது. லாப நஷ்டமின்றி தட்டையாகவே நிறைவடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 64.55 புள்ளிகள் உயர்வடைந்து 59,632.35 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.7 புள்ளிகள் உயர்ந்து 17,624.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், டிசிஎஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE