சென்செக்ஸ் 159 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 159 புள்ளிகள் (0.27 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,567 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41 புள்ளிகள் (0.23 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,618 ஆக இருந்தது.

இரண்டு நாட்கள் தொடர்ந்து சரிவில் நிறைவடைந்த பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தையும் சரிவுடனயே தொடங்கின. காலை 10:16 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 104.73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,622.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.85 புள்ளிகள் சரிவடைந்து 17624.30 ஆக இருந்தது.

தகவல் தொழில்நுட்ப பங்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி பங்குகளின் சரிவு, வெளிநாட்டு நிதி வெளியேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் 863 புள்ளிகளை இழந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 159.21 புள்ளிகள் சரிவடைந்து 59,567.80 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.40 புள்ளிகள் சரிவடைந்து 17,618.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜி, இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், விப்ரோ, என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE