சென்செக்ஸ் 183 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 183 புள்ளிகள் (0.31சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,727 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.26 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,660 ஆக இருந்தது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியது இருந்தபோதிலும், நிலையில்லாத வர்த்தகத்தால் வீழ்ச்சியைச் சந்தித்தது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 181.19 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,729.56 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.25 புள்ளிகள் சரிவடைந்து 17,678.60 ஆக இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. விரைவில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. நிலையில்லாமல் நீடித்த வர்த்தகத்தில் தகவல்தொழில் நுட்ப பங்குகள், நிதிப்பங்குகளின் அழுத்தத்தால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன. இதனால் கடந்த வாரத்தில் தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகள், தொடர்ந்து இரண்டாவது சரிவில் நிறைவு செய்துள்ளன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 183.74 புள்ளிகள் சரிவடைந்து 59,727.01 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.60 புள்ளிகள் சரிவடைந்து 17,660.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜி, விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டெக் மகேந்திரா, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE