சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 143 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்ந்து 59,832 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 17,599 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயேத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித அறிவிப்புக்கு பின்னர் லாபத்தை நோக்கிச் சென்றது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 86.53 புள்ளிகள் உயர்வடைந்து 59,775.84 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.20 புள்ளிகள் உயர்வடைந்து 17,584.25 ஆக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி,அதன் நிதிக்கொள்கைக்குழு கூட்டத்தின் முடிவினை வியாழக்கிழமை அறிவித்தது. அதன்படி, ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு இந்திய பங்குச்சந்தைகளை லாபத்தில் நிறைவடையச் செய்திருக்கின்றன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 143.66 புள்ளிகள் உயர்வடைந்து 59,832.97 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.20 புள்ளிகள் உயர்வடைந்து 17,599.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனானஸ், டாடா மோட்டர்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE