சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 126 புள்ளிகள் (0.22 சதவீதம்) உயர்வடைந்து 57,653 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 16,985 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 323.00 புள்ளிகள் உயர்வடைந்து 57,850.10 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 77.65 புள்ளிகள் உயர்வடைந்து 17,022.70 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எஃப்எம்சிஜி, தகவல் தொழில்நுட்பம் ஹெவிவெயிட் பங்குகளால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வில் நிறைவடைந்தன. இருந்தபோதிலும், ஆட்டோ, மின்சாரம், நிதிப் பங்குகளின் அழுத்தால் சந்தைகள் குறைவான லாபத்தில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 126.76 புள்ளிகள் உயர்வடைந்து 57,653.86 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.70 புள்ளிகள் உயர்வடைந்து 16,985.70. ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், மாருதி சுசூகி, ஐடிசி, ஹெச்சிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா பங்குகள் உயர்ந்திருந்தன. எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE