பங்குச்சந்தை | சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 129 புள்ளிகள் உயர்வடைந்து 58,054 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 17,094 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 57.01 புள்ளிகள் சரிவடைந்து 57,868.27 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.55 புள்ளிகள் சரிவடைந்து 17,068.35ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஐடிசி, விப்ரோ, எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE