பங்குச்சந்தை | சென்செக்ஸ் 343 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிந்து 57,435 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் சரிவுடன் 16,938 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 343.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,212.80 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.45 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,913.70 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் நேற்றையச் சரிவின் நீட்சியாக இன்றும் வீழ்ச்சியுடனேயே வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE