பங்குச்சந்தை | சென்செக்ஸ் 46 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வுடன் 58,278 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்வுடன் 17,172 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வார இரண்டாம் நாள் வர்த்தகம் தட்டையாகத் தொடங்கி ஏற்ற இறக்கத்தில் பயணித்தது. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 46.14 புள்ளிகள் உயர்வடைந்து 58,283.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34.50 புள்ளிகள் உயர்வடைந்து 17,188.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல், அமெரிக்க வங்கியான எஸ்விபி திவால் ஆனது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்டி டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE