தங்கம் பவுன் மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.80 அதிகரித்து ரூ.5,270-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை8 கிராம் ரூ.45,056க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.68,700 ஆக உள்ளது.

இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் தங்கத்துக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் தொடர்ந்து சில நாட்களுக்கு நீட்டிக்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE