மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 415 புள்ளிகள் (0.69 சதவீதம்) உயர்வடைந்து 60,224 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி117 புள்ளிகள் (0.67 சதவீதம்) வீழ்ச்சிடைந்து17,711ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 541.56 புள்ளிகள் உயர்வடைந்து 60,350.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 177.15 புள்ளிகள் உயர்வடைந்து 17,771.50 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் நேர்மறையான, வலுவான போக்குகள் இந்திய சந்தைகளுக்கும் பரவியது. அதனால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் நாளில் அதிகபட்சமா 690 புள்ளிகளாக உயர்ந்து 60,498 ஆக இருந்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 415.49 புள்ளிகள் உயர்வடைந்து 60,224.46 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,711.45.ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. மறுபுறம் எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.