புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் நிதித்துறையின் தரம் மேம்பட்டு வலுப்படுத்தப்படுவதுடன், குடிமக்களின் எளிதான வாழ்க்கைக்கும் உதவுகிறது. அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
2017-18 நிதியாண்டில் ரூ.2,071 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2021-22 நிதியாண்டில் ரூ.8,840 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்தது. 2022-23 நிதியாண்டை பொறுத்தவரை கடந்த டிசம்பர் 31, 2022 வரை ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றன.
2017-18 நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 1,962 லட்சம் கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் டிசம்பர் 31, 2022 வரை 2,050 லட்சம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.