தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறுநாடுகள் தற்போது பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர். இதன்காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேற்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.5,325-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600-க்கும் விற்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சி நீடித்தால் கிராம் ரூ.6 ஆயிரம் வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தங்க, வைர நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE