பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்வுடன் 60,130 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி பெரியமாற்றங்கள் இன்றி 18,000 க்கும் குறைவாக இருந்தது.

பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமின்றி தொடங்கிய போதிலும் விரைவில் ஏற்றத்தை நோக்கிச் சென்றன. காலை 09.38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் மேலும் 280.69 புள்ளிகள் உயர்வடைந்து 60,373.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.20 புள்ளிகள் சரிந்து 17,923.05 ஆக இருந்தது.

உலகளாவிய குழப்பமான சூழல்களுக்கு மத்தியில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் செவ்வாய்கிழமை வர்த்தகத்தைத் தொடங்கிய பங்குச்சந்தைகள் விரைவில் ஏற்றத்தில் பயணிக்கத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE