எல்ஐசியின் 31.62 கோடி பங்குகளை விற்க திட்டம்

By செய்திப்பிரிவு

எல்ஐசி நிறுவனத்தின் பொதுமேலாளர் மினி ஐப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

புதிய வணிக பிரீமியம் வர்த்தகத்தில் எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட உள்ளது. ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

பங்கு வெளியீட்டில் 50 சதவீதம் நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE