சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.
கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
» இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 71,365; நேற்றைவிட சற்றே அதிகம்: தினசரி பாசிடிவிட்டி விகிதம் 4.5%
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20உயர்ந்து ரூ. 4578- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 36624-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 39552-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 1.80 ரூபாய் உயர்ந்து ரூ 66.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 66,800 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago