இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு புதிய தலைவர்

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா பொறுப் பேற்றுள்ளார்

இவர் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சுத்திகரிப்பு இயக்குநராகப் பதவி வகித்து வந்தார். ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பொறியியல் படித்த வைத்யா, பெட்ரோ கெமிக்கல் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் டேங்கிங் லிமிடெட் ஆகியவற்றுக்கும் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தலைவராக இருப்பார் என இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE