உருக்கு துறையை மேம்படுத்த வெள்ளை அறிக்கை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

மிகுந்த நெருக்கடியில் உள்ள உருக்குத் துறையை மேம்படுத்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப் பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதன் மூலம் உருக்கின் மீதான வரி விதிப்பு சுமைகள் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை நிதி ஆயோக்கிடம் தந்துள்ளதாகவும் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இது தயாராகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உருக்கு துறை சார்ந்து நிதி அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்களுடன் பேச்சு நடத்தி வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை நிதி ஆயோக் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

உருக்கு துறையை சர்வதேச அளவில் போட்டி போடும் அளவுக்கு உயர்த்துவதுதான் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட் டார். வெள்ளை அறிக்கை தயா ரிப்பதன் மூலம் உருக்கின் மீது விதிக்கப்படும் வரி மற்றும் செஸ் உள்ளிட்ட பிற வரிகள் குறைக்கப் படுவதற்கான வாய்ப்புகள் பிர காசமடைந்துள்ளன.

இந்திய உருக்குத் துறை, சர்வ தேச அளவில் உருக்குத் துறை யின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்த்து அறிக்கை தயாரிக்கும் படி கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE