பங்குச்சந்தையில் தொடர்ந்து 3-வது நாளாக வர்த்தகம் ஏற்றம்

By செய்திப்பிரிவு

பங்குச்சந்தையில் தொடர்ந்து 3-வது நாளாக வர்த்தகம் இன்றும் ஏறுமுகத்தில் உள்ளது. வர்த்தக துவக்கத்தின் போது, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 89.44 புள்ளிகள் உயர்ந்து 21,366.30 புள்ளிகளாகவும், நிப்டி 22.85 புள்ளிகள் உயர்ந்து 6,351.50 புள்ளிகளாகவும் இருந்தது.

சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பங்குகளை வாங்கும் போக்கில் நிதானம் கடைபிடிக்கப்படுவதாலும், ஆசிய சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் இருப்பதும் வர்த்தக ஏற்றத்துக்கு காரணம் என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் உயர்ந்துவ்61.43 என்ற நிலையில் தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE