டாடா ஹவுசிங் சென்னையில் ரூ. 700 கோடி முதலீடு

அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டுவதில் முன்னணியில் உள்ள டாடா ஹவுசிங் நிறுவனம் சென்னையில் ரூ. 700 கோடி முதலீட்டில் புதிய குடியிருப்பு கட்டும் திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. சென்னையில் 15 ஏக்கர் பரப்பில் 1,600 அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டாடா ஹவுசிங் நிறுவனத்தின் அங்கமான டாடா வேல்யூ ஹோம்ஸ் நிறுவனம் இந்த நடுத்தர மக்களுக்கான குடியிருப்புகளை கட்டுப்படியாகும் விலையில் கட்டித் தர உள்ளது. நியூ ஹெவன் என்று இந்தத் திட்டப் பணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

டாடா வேல்யூ ஹோம்ஸ் நிறுவனம் மாம்பாக்கத்தில் இந்த நியூ ஹெவன்ஸ் திட்டப் பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த நிறுவனம் மேற்கொள்ளும் நான்காவது திட்டப் பணி இதுவாகும். இந்நிறுவனம் சுப கிரஹா மற்றும் நியூ ஹெவன் என்ற பிராண்டு பெயரில் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE