பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தக துவக்கத்தின் போது பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 196 புள்ளிகள் உயர்ந்து 21,710 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
நிப்டியும், 53.55 புள்ளிகள் உயர்ந்து 6,454.70 புள்ளிகள் என்ற இது வரை இல்லாத நிலையில் வர்த்தகமாகியுள்ளது.
கடந்த மூன்று தினங்களாகவே சந்தையில் வர்த்தக போக்கு ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த மூன்று வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 567 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3 மாதங்களில் இல்லாத உயர்வு:
அந்நியச் செலாவணிச் சந்தையில்,வர்த்தக துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 61.03 என்ற நிலையில் இருந்தது. இது கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.