பிரான்சைச் சேர்ந்த மின்சாதன பொருள் தயாரிக்கும் நிறுவனமான ஷ்னிடர் தனது சென்னை உற்பத்தி ஆலையை திங்கள்கிழமை தொடங்கியது. இந்த ஆலையில் தயாராகும் பொருள்கள் மேற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.
உலகெங்கிலும் உற்பத்தி மையம் அமைத்துள்ள இந்நிறுவனம், இந்தியாவில் அமைத்துள்ள 32-வது தொழிற்சாலையாகும்.