தமிழகத்தில் ஜன.29, ஜன.31-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்!

By கி.கணேஷ்

சென்னை: பத்திரப்பதிவுக்கு ஜன.29 (நாளை) மற்றும் ஜன.31 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது தை அமாவாசை நாளான ஜன.29-ம் தேதி மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான ஜன.31-ம் தேதி ஆகிய நாட்களில் அதிகளவில் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதலான டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று ஜன.29 மற்றும் 31-ம் தேதி ஆகிய நாட்களில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்