பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243 ஆகவும், நிஃப்டி 175.7 புள்ளிகள் உயர்ந்து 24,044 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.72%, நிஃப்டி 0.74% உயர்ந்தன.

சென்செக்ஸ் 79 ஆயிரத்தையும், நிஃப்டி 24 ஆயிரத்தையும் தாண்டுவது இதுவே முதன்முறை.

அதிகபட்சமாக, அல்ட்ராடெக் சிமெண்ட் 5.15%, எல்டி மைண்ட் ட்ரீ 3.85%, கிராசிம் 3.34%, என்டிபிசி3.31%, விப்ரோ 3.15%, டாக்டர் ரெட்டி லேப்ஸ் 2.73%, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.61%, பிபிசிஎல் 2.16%, டாடா மோட்டார்ஸ் 2.13%, இன்போசிஸ் 2.12%, டிசிஎஸ் 2.03% என்ற அளவில் ஏற்றம் கண்டன.

அதேசமயம், ஸ்ரீராம் பைனான்ஸ் 1.27%, எல் அண்ட் டி 1.07% இறக்கம் கண்டன.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக கூட்டணி 3-வது முறையாக கடந்த ஜூன் 9-ம் தேதி ஆட்சி அமைத்தது. அது முதலேயே பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. ஜூன் 10-ம் தேதி சென்செக்ஸ் 76,490 ஆக இருந்தது. இந்நிலையில், இரண்டு வாரங்களில் 3,000 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இணைப்பிதழ்கள்

14 mins ago

தமிழகம்

17 mins ago

உலகம்

10 mins ago

உலகம்

30 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

1 hour ago

மேலும்