தங்கம் விலை: சென்னையில் கிராமுக்கு ரூ.640 உயர்வு; மீண்டும் ரூ.55,000-ஐ நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் விலை கடுமையாக குறைந்தது. ஆனால் கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தொடங்கிய பின்னர் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. பவுன் ரூ.50,000 எனத் தொடங்கி பல புதிய உச்சங்களைத் தொட்டது. கடந்த ஏப்.19-ம் தேதி ரூ.55,120 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னர் ரூ.55,000ஐ ஒட்டி ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (மே.18) ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 6,850-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சங்களைத் தொட்டுவருவது நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதித்துள்ளனது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 mins ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்