மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஜூன் காலாண்டு நிகரலாபம் 3% உயர்ந்து ரூ.3,349 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் ரூ.3,241 கோடியாக இருந்தது கடந்த ஆறு காலாண்டுகளில் நிகர லாபம் வளர்ச்சி அடைந்திருப்பது இதுதான் முதல்முறை.
வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 72 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,266 கோடியாக இருந்த ஒதுக்கீடு இப்போது ரூ.3,903 கோடியாக இருக்கிறது.
நிகர வட்டி வருமானம் 15 % உயர்ந்திருக்கிறது. மாறாக இதர வருமானம் 5 சதவீதம் சரிந்திருக்கிறது. வங்கியின் மொத்த வருமானம் உயர்ந்து ரூ.40,739 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.36,192 கோடியாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 5.56 சதவீதமாக இருந்த வாராக்கடன் இப்போது 4.9 சதவீதமாக இருக்கிறது. வர்த்தகத்தின் முடிவில் 0.75% சரிந்து 2,417 ரூபாயில் எஸ்.பி.ஐ. பங்கின் வர்த்தகம் முடிந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
3 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago