தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த 5-ம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்து ஒருபவுன் ரூ.48,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை எட்டியது.தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இதன்படி, நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.79,200 ஆக உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கண்டு, நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE