சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.48,840-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,105-க்கும்,பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.48,840க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,600க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி ரூ.79க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.79,000 ஆக உள்ளது.