ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு: பஜாஜ் நிறுவனம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தனது ஊழியர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிறுவனத்தில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 9,500-ம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் அடிக்கடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.

ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2013-முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கானதாகும். இருப்பினும் பஜாஜ் ஆட்டோ பங்குகளை குறைந்த விலையில் பணியாளர்களுக்கு அளிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. ஒப்பந்தத்தை அடுத்து ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை 15 நாள்களுக்குள் திரும்பப் பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்