தனது ஊழியர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதிய உயர்வு அளிக்கப் போவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை முடிவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிறுவனத்தில் 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ. 9,500-ம் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் சக்கன் ஆலையில் அடிக்கடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நிர்வாகத்துக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது.
ஊதிய உயர்வு ஏப்ரல் 1, 2013-முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும். ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கானதாகும். இருப்பினும் பஜாஜ் ஆட்டோ பங்குகளை குறைந்த விலையில் பணியாளர்களுக்கு அளிப்பது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. ஒப்பந்தத்தை அடுத்து ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை 15 நாள்களுக்குள் திரும்பப் பெற நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago