2 கோடி வீடுகள் முதல் ‘வரி வழக்கு’ ரத்து வரை: இடைக்கால பட்ஜெட் 2024-ல் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்:

5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள்: மீன்வளத் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து ஒருங்கிணைந்த கடல்சார் பூங்காக்கள் அமைக்கப்படும். பிரதமரின் மத்ஸ்ய சம்படா திட்டம் கீழ்க்கண்டவாறு முடுக்கி விடப்படும்: 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு உற்பத்தித் திறனை தற்போதுள்ள 3 டன்னிலிருந்து ஹெக்டேருக்கு 5 டன்னாக அதிகரித்தல்; 2. ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்குதல்; 3. எதிர்காலத்தில் 55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல். | நீலப் பொருளாதாரம் 2.0-க்கான பருவநிலை நெகிழ்திறன் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, ஒருங்கிணைந்த மற்றும் பல்துறை அணுகுமுறையுடன் கடலோர மீன்வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவற்றுக்கான திட்டம் தொடங்கப்படும்.

இதையும் படிக்க: > மத்திய இடைக்கால பட்ஜெட் 2024 - முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE