புதிய உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தைகள்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 371.95 புள்ளிகள் உயர்ந்து 72,410 ஆகவும். நிஃப்டி 123.95 புள்ளிகள் உயர்ந்து 21,778 ஆகவும் நிலைகொண்டது. அதிகபட்சமாக கோல் இந்தியாவின் பங்கு மதிப்பு 4.20%, எம் எம் 2.75%, ஹீரோ மோட்டாகார்ப் 2.68%, என்டிபிசி 2.56% ஏற்றம் கண்டன. அதானி எண்டர்பிரைசஸ் 1.18%, எல்&டி 0.73%, அதானி போர்ட்ஸ் 0.73%, ஈய்ஷர் மோட்டார்ஸ் 0.68% சரிவைக் கண்டன. நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்திய பங்குச் சந்தை இடம்பிடித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE