5 ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147 சதவீதம் உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார். நடப்பு 2023-24ம் நிதியாண்டில், டிச.11 வரை மின்னணு பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 11,660 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகள் மற்றும் நடப்பாண்டில் மின்னணு பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த விவரங்களை அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE